Breaking News

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.! tnpsc group 4 result

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது கடந்த வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. 

 

தமிழகத்தில் இந்த தேர்வை 18,36,535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர் இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக தேர்வு முடிவுகள் குறித்து அறிவித்துள்ளது.

அதில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் தேர்வுகள் எழுதியுள்ளதால் மூன்று மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது எனவும், விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது

மேலும் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback