குரூப் 2 தேர்வில் குளறுபடி காரணம் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த சமயத்தில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்படி, தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏன் குளறுபடி என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. அதில் இந்நிலையில் வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதும் குளறுபடிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வேலைவாய்ப்பு