Breaking News

அனுமதி பெறாமல் வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூபாய் 2.5 லட்சம் அபராதம் விதிப்பு

அட்மின் மீடியா
0

உரிய அனுமதி பெறாமல் வீட்டில் வெளிநாட்டு ரக கிளி வளர்த்ததன் காரணமாக வனத்துறையினர் ரோபோ சங்கருக்கு ரூபாய் 2.5 லட்சம் அபராதம் விதிதுள்ளார்கள்

image source google

நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் தனது வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து வீடியோ பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கிண்டி வனத்துறையினர் அதிரடியாக  சோதனை நடத்தி அந்த 2 கிளிகளை பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு ரக கிளிகளை உரிய அனுமதியில்லாமல் வீட்டில் வளர்த்ததாக வனத்துறையினர் ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விளக்கம் கேட்டனர். அவர் அளித்த விளக்கம் வனத்துறையினருக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் அவருக்கு ரூ 2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback