24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு local holiday feb 24
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பழனி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகிற 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற இருக்கிறது. ஆகையால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்