பிப்ரவரி 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு local holiday
தமிழகத்தில் அரசு பள்ளிகள் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறையை தவிர்த்து உள்ளூர் விடுமுறைகளும் அளிக்கப்படுவதுண்டு. உள்ளூர் விழாக்கள், பண்டிகைகள் பொறுத்து குறிப்பிட்ட மாவட்ட அளவில் இந்த விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் பிப்ரவரி 18ம் தேதி சனிக்கிழமை 3வது சனிக்கிழமை ஆதலால் அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பிப்ரவரி 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பிப்ரவரி 18ம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. அவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாவட்ட கருவூலங்கள் குறைவான பணியாளர்களை கொண்டு வழக்கம் போல் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 25ம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்