நாற்காலி எடுத்து வர தாமதம் கோபமாக கல்லை தூக்கி ஏறிந்த அமைச்சர் ஆவடி நாசர் வைரல் வீடியோ avadi nasar viral video
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூரில் நாளை மொழிப்போர் தியாகிகளுக்குகாக நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்,இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து தான் அமருவதற்காக இருக்கை எடுத்து வருமாறு நிர்வாகி ஒருவரிடம் கூறியுள்ளார். ஆனால் நிர்வாகி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர், கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை நோக்கி வீசினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:-
Tags: அரசியல் செய்திகள் வைரல் வீடியோ