Breaking News

9 ம்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் ஜன.9 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 



இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள்

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்க 80% டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைக்கிறார்.

மேலும் அன்றைய தினமே மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் தரமான பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தரமான பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளன என அவர் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback