Breaking News

தமிழகத்தில் மின் இணைப்பு உள்ள வீடு, கடை ஆர்.சி.டி கட்டாயம் - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவு! TNEB

அட்மின் மீடியா
0

மின்சார விபத்துகளை தவிர்க்க வீடு, கடை என அனைத்து மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி எனப்படும் ட்ரிப்பர்கள் பயன்படுத்த வேண்டும். ட்ரிப்பர்கள் பயன்படுத்தினால் மின் கசிவை தடுக்கவும், அதிக வோல்டேஜ் காரணமாக மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்து தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும், அதனால் இனி தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் ட்ரிப்பர்கள் பொறுத்த வேண்டும் என மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் பழுது மின்கசிவினால் மற்றும் ஏற்படும் ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

நடப்பு மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின் விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்கபுதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை  தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. கடந்த சில மழைக் கால மாதங்களில் பல வகைகளில் மின் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சில:

(1) வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம்
உள்ளஇரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது,

(II) ஒரு தொழிலாளி கடையின் ஷட்டரை (Shutter) திறக்க முற்பட்ட போது,

(II) ஒரு பெண் அவரது வீட்டில் உள்ள கொடிக் கம்பியில் துணிகளை உலர்த்த முற்பட்ட போது,

(IV) ஒரு சிறுவன் பூங்காவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தை தொட்ட போது, (V) அரசு ஊழியர் ஒருவர் மழைப் பெய்யும் நேரத்தில் மோட்டரை (Motor) இயக்க முற்பட்ட போது.

(VI) மாணவர் ஒருவர் வீட்டிலுள்ள UPS பழுது பார்க்க முற்பட்ட போது.

மேற்கண்ட விபத்துகள் சில உதராணங்களே தவிர முழுமையானதல்ல. ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்தியிருந்தால் மேற்கண்ட மின் விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும்.. சில ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை (RCD) நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.

3. எனவே, வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகர்வோர்களும், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பை பார்க்க:-

http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-011220221114Tam.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback