தமிழகம் முழுவதும் கோவில்களில் செல்போனுக்கு தடை!! ஐகோர்ட் கிளை உத்தரவு
கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்,இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழகத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக இந்த உத்தரவுகளை தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவு.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்
மேலும், கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்ய இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் கிளை ஆணையிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்