தமிழகத்தில் BF-7 கொரோனா இல்லை|மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - தமிழக அரசு Covid BF.7 scare
தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (22.12.2022) நண்பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அவர்கள் எடுத்துரைத்தார்.
சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சுகாதாரச் செயலாளர் சுற்றறிக்கையின்படி, கோவிட் தொற்று எண்ணிக்கை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை அறிவுறுத்தப்பட்டுள்ளது. (Whole Genomic Sequencing) செய்யவும்
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும். இது BA-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். தற்போது பரவி வரும் BF-7 வகையான சில ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று BA-5-ன் உள்வகையாகும். இத்தகைய BA-5 தொற்று தமிழ்நாட்டில் ஜீன், ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட இந்த தொற்றின் வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .
தற்போது தமிழ்நாட்டில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கோவிட் பரிசோதனை செய்யவும், கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழுமரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் இன்புளுயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று (IL & SARI) ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், நோய்த்தொற்று அறிகுறிகள் சமூக இடைவெளியினை தென்பட்டால் உடனே கடைபிடிப்பது. அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சர்வதேச விமானநிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (SOP) கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு தலைமைச் செயலாளர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, காவல்துறை இயக்குநர், அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, குழும இயக்குநர், தேசிய நலவாழ்வுக் குழுமம், திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம், மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், மருத்துவக்கல்வி இயக்குநர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் சுகாதார அலுவலர் பெருநகர சென்
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்