Breaking News

மாமல்லபுரம் அருகே கரையை கடக்க துவங்கிய மாண்டஸ் புயல் | 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் வானிலை ஆய்வு மையம் mandous cyclone update

அட்மின் மீடியா
0

 வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாமல்லபுரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையை கடந்துவருகிறது. புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தரைக் காற்றின் வேகம் பலமாக வீசத் தொடங்கியுள்ளது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கும். 

மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் எங்கே உள்ளது ? கரையை கடக்கும் பாதை சாட்டிலைட் Live....mandous cyclone

https://www.adminmedia.in/2022/12/livemandous-cyclone.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback