Breaking News

சென்னையில் டிசம்பர் 3 ம் தேதி பள்ளிகள் செயல்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய, சென்னை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (டிச.03) அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாளாக அறிவிப்பு




இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில்செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதிசெயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback