Breaking News

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 25 ம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு live weather update

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து தெற்கு – தென்கிழக்கு திசையில் 600 கிமீ தொலைவில் உள்ளது.

சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 690 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையிலும் பின்னர் மேற்கு – தென்மேற்கு திசையிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால்

24.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.12.2022: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback