Breaking News

தேன் எடுக்க சென்றபோது தவறி குகைக்குள் சிக்கிய நபர் 2 நாட்களுக்கு பின்பு மீட்பு வீடியோ telangana man trapped between rocks for 2 days

அட்மின் மீடியா
0

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டியாபட்டு  கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ  இவர் ஊரின் அருகில் சிங்கராயபள்ளி  காட்டில் கடந்த 13-ம் தேதி  தேன் எடுக்க சென்றுள்ளார்

அங்குள்ள மரத்தில் அவர் தேனை எடுத்து கொண்டிருக்கும் போது பாறை இடுக்கில் அவரது செல்போன் தவறி விழுந்துள்ளது. அப்போது செல்போனை எடுக்க முயன்றபோது அவரும் பாறைக்குள் தவறி விழுந்தார். 

வெளியே வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. அவரால் வெளியே வரமுடியவில்லை, அதன் பின்பு அவரை காணமல் அவரது குடும்பத்தினர் தேடியதில் அவர் பாறை இடிக்கில் சிக்கிகொண்டதை அறிந்து அவரை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்தனர் அதன்பின்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அங்கு வந்த தீயனைப்பு துறையினர் கற்பாறைகளை உடைக்கும் கருவிகள் கொண்டு சுமார் 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/its_pradiv_/status/1603452592075706368

https://www.youtube.com/watch?v=e8hqP-Z1jnA

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback