ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் தற்கொலை மிரட்டல் சாதுர்யமாக மீட்ட போலிசார் வைரல் வீடியோ tiruvottiyur railway station
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலைய நடைபாலத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை ரயில்வே நடைபாதையில் திடீரென ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்க காவல்துறையினர் வாலிபரின் கவனத்தை திசை திருப்ப்பி அந்த வாலிபரை சாதுரியமாக பிடித்தனர். இதுகுறித்து காவல்துறையின் விசாரணை நடத்தியதில். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞர் மனநிலை காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞரை ரயில்வே காவல்துறையினர் சாதுரியமாக மீட்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளிடம் வரவேற்பு பெற்றது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/newsreporterra1/status/1597774094065623040
Tags: வைரல் வீடியோ