நகைக்கடை உரிமையாளரைச் சுட்டு நகைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் பரபரப்பு சிசிடிவி வீடியோ
நகைக்கடை உரிமையாளரைச் சுட்டு நகைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் பரபரப்பு சிசிடிவி வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள நகைக் கடையில் திடீரென்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் வருவதை கண்ட உரிமையாளர் லாக்கரை மூட முற்பட்டபோது கொள்ளையர்களில் ஒருவன் அவரை துப்பாக்கியால் சுட்டதால் அவர் கீழே சரிந்தார் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
அவர்களை மிரட்டிய கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி யில் பதிவாகி உள்ளது, தகவல் அறிந்து போலிசார் கடை உரிமையாளரை மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்
பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த 2 மர்ம நபர் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ