Breaking News

ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

அட்மின் மீடியா
0

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள கோதண்டராமன் நகர் அருகே பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியாக சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில்  வெங்கட்ராமன் என்பவர் உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையில், அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் 3 பேரும் துபாயில் இருந்து வந்துள்ளனர்.

நள்ளிரவில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த போது மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்தது. இதனால், ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிரிஜா வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனையடுத்து, உடல் கருகி உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி, குழந்தை ஆராதயா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரியவந்துள்ளது.சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback