வங்கக்கடலில் 16ம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி? இந்திய வானிலை மையம் அறிவிப்பு
நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.இதன் காரணமாக,இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும். நாளை(நவ.13) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது ,
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 16ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா? புயலாக வலுப்பெறுமா? அது கடக்கும் பாதை என்ன என்பது பற்றி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகே கணிக்க முடியும் .இதனால் தமிழகம் கேரளா மற்றும் புதுவையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்