Breaking News

கனமழை காரணமாக இன்று 14 .11.2022 பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக இன்று  14.11.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி ,கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட  ஆட்சித் தலைவர் திருமதி. இரா. லலிதா.இ, ஆ,ப, அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் இன்று (14/11/2022) விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதால் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு அதன்படி 

அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 

நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, 

மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, 

நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 

வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 

ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-


வடகிழக்கு பருவமழை

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா

adminmedia

admin media

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback