Breaking News

12 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு 18ஆம் தேதி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனவேலைவாய்ப்பு முகாம்

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரத்தில் வரும் 18ஆம் தேதி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், பிளஸ் 2 முடித்த பெண்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

மகளிர் அதிக வேலைவாய்ப்பினை பெறும் பொருட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (Tata Electronics) நிரந்தர பணியில் பணிபுரிய +2 வரையில் மட்டும் படித்த பெண்கள் தேவைப்படுகிறார்கள். 

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஓராண்டு பயிற்சி முடித்தவுடன் நிரந்தர பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஓராண்டு பணிபுரிந்த பின் அவர்களுக்கு Tata Electronics நிறுவனத்தில் பி.எஸ்சி டிகிரி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே அவர்களுக்கு ரூ.15,000/- ஆரம்ப ஊதியமாக வழங்கப்படுவதுடன் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை சலுகை அடிப்படையில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள நபர்கள் வரும் 18ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சுயவிவர குறிப்பு ஆகிய அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், விவரங்களுக்கு 044 - 27237124 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த நேர்முக தேர்வில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைதேடும் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback