10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அரசு பஸ் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச் சீட்டை நடத்துனர்கள் வழங்க வேண்டும். நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்