Breaking News

உண்மை என்றைக்கும் மாறாது அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எந்த விசாரணை நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் . - சசிகலா அறிக்கை jayalalitha death sasikala

அட்மின் மீடியா
0

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை குறித்து சசிகலா பதில் அறிக்கை



ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்து சசிகலா விளக்கமளித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
 

என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை . இதுபோன்று என் மீது பழி போடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு அம்மாவின் கரத்தைப் பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்திருக்க முடியாது. 

ஆனால் அதே சமயம் என் அக்கா புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்கிறார்.மேலும், அம்மா மறைந்த பிறகு நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் என் மனதில் தோன்றியது என்னவென்றால், அம்மா அவர்களுடன் நெருங்கி பழகிய முக்கிய அரசியல் தலைவர்கள் , அம்மாவுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், அம்மாவின் நலனுக்காக பாடுபட்டவர்கள் என்று எல்லோரையும் அழைத்து கழக முன்னோடிகள், நிர்வாகிகள் ,நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பெரிய அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்துவது, அம்மாவின் ஏழை எளிய மக்கள் பயறு வகையில் மக்களுக்காக ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்கா மக்கள் நல பணிகள் ஆகியவற்றை மனதில் வைத்து அதைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் அம்மா பெயரில் மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் தொண்டர்கள் ஏழை எளிய மக்கள் ஆகிவருக்கு பலன் அளிக்கும் வகையில் தொடர்ந்து உதவிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.ஆனால், விதிவசத்தால் நானோ சிறைக்குச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது . 

இங்கு இருந்தவர்களோ என்ன செய்தார்கள் எதை சாதித்தார்கள்? என்பதை தொண்டர்களும் நாட்டு மக்களும் நன்றாக அறிவார்கள்.அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியல் ஆக்கினார்கள். கழகத்திற்கு எதிரானவர்கள் கழகத்தை அழிக்க நினைத்தவர்கள், குறிப்பாக அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்தது நிறைவேறியது. அதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று என்று கூறியிருக்கிறார்.

அவர் மேலும், என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மாவின் மரணத்தை சர்ச்சையாக்கியதுதான் மிகவும் கொடுமையானது. நானும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக இலக்கணமாகவே வாழ்ந்தோம். இது இறைவன் இப் பிறவியில் எனக்கு அளித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.அம்மாவின் மரணத்தை சர்ச்சையாக்கி அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து அதன் அறிக்கையையும் அரசியலாக்கி விட்டார்கள். 

இவர்கள் பங்கிற்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மா மரணத்தை பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மை என்றைக்கும் மாறாது . அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அம்மா உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிர்ஷ்ட வசமாக நம்மையெல்லாம் நிற்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை . இந்த எதார்த்தத்தை தொண்டர்கள் பொது மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்

இந்த விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரை திருப்திப்படுத்தம் எண்ணத்தில் யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?நானும் அம்மாவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம் . என்னையும் அவரையும் எப்படியாவது பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது . 

அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்மாவும் நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து, என்ன நடக்கிறது என்று பார்த்தோம் . இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன்.ஆனால், 2012 ஆம் ஆண்டு முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரி இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? யார் இதைப்பற்றி அவரிடம் சொன்னது? இறந்து போன புரட்சித்தலைவி அம்மா இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போதே இப்படி ஒரு பொய்யான அபத்தமான கருத்தை ஆணையைம் தெரிவிக்க காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்தவிதமான பரிசோதனை செய்ய வேண்டும், எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கம் எல்லாம் அக்காவுக்கு முதல் தர திருச்சி தர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது.

அம்மாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கு நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை . ஏன் சில மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் அதை முடிவெடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்க மாட்டார்கள் . என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த விசாரணை நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் . 

அரசியல் ரீதியாக அம்மாவை எதிர்க்க கூட துணிவில்லாதவர்கள் அவரின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்க மாட்டார்கள். பொதுமக்கள் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback