Breaking News

இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிகொள்ளலாம் என்ற செய்தி உண்மையில்லை

அட்மின் மீடியா
0

இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிகொள்ளலாம் என்ற செய்தி உண்மையில்லை

இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்க வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

 
தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கடந்த மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். 
முதல்வராக பொறுப்பு ஏற்ற அன்றே  'பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

தி.மு.க அரசின் இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசி-யில் பயனக்கிறீங்க என்று பேசியது சர்ச்சையானது. 

இந்நிலையில் அதனை தொடர்ந்து கோவையில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ” நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று சொல்லி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த வீடியோ வைரல் ஆனது

இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் போக்குவரத்துத்துறை அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று அனைத்து நடந்துநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன

இந்நிலையில் தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அவர்கள் அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி, உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார்

Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Give Us Your Feedback