Breaking News

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு,தங்குமிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது இதற்கான அறிவிப்பை அரசு தேர்வாணையப் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
 
 
 

 
 
கல்விதகுதி:
 
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
 
வயது வரம்பு:
 

அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கவேண்டும்.
 
இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
 
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையானவை:

ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் சான்றிதழ், 

சாதிச் சான்றிதழ், 

இருப்பிடச் சான்றிதழ், 

3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 

ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ

 
விண்ணப்பிக்க:
 
 
 
விண்ணப்பிக்க கடைசி நாள்:
 
27.10.2022
 

அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி. உணவு, தரமான நூலகம். காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. 

இப்பயிற்சி மையம் 225 முழுநேர த் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள். கோயம்புத்தூர். மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன. 

2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். 

இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். 

மேலும், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் 

தகுதியுடைய -நபர்கள் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் 2022, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் தலைமைச் செயலாளர்/



 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback