கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 21.10.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு முழு விவரம் today school leave
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை -திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு!
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்