கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே ஏற்பட்ட கலவரம் 127 பேர் பலி...கலவர வீடியோ
அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 127 பேர் உயிரிழந்தனர் வீடியோ இதோ...
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ளூர் அணிகளான அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது.ந்தப் போட்டியைக் காண மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.இதில் இறுதியில் பெர்சிபாயா அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் வென்றது.
அரிமா எப்சி அணியினர் பார்வையாளர் மடத்தில் இருந்து இறங்கி, மைதானத்தின் நடுப்பகுதிக்கு செல்ல ஆரம்பித்தனர். மறுபக்கம் பெர்சிபாயா அணியினரும் மைதானத்தின் நடுப்பகுதிக்கு சென்ற நிலையில் கலவரம் வெடித்தது. இரு தரப்பும் மாறிமாறி கடுமையாக தாக்கிக்கொண்டனர்.இதனால் ரசிகர்களுக்கிடையில் கலவரம் வெடித்துள்ளது
இரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு கலகத் தடுப்புப் போலீசார் மைதானத்தை சுற்றி வளைத்தனர்.விளையாட்டு மைதானத்தின் ஆடுகளத்தில் கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளுவும் சேர்ந்து ஏற்பட்ட நெரிசலில் இந்த துரதிருஷ்டவசமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.கலவரத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 127 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ProfanityNewz/status/1576355908661100544
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ