Breaking News

மக்களே தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! flood alert in 12 district

அட்மின் மீடியா
0

 மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் கடந்த 1 வாரமாக நல்ல மழை பெய்து வருகின்றது இதனால் பல அணைகள் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது 

அதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது.இதனால் தமிழகத்தில் காவேரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 

சேலம், 

ஈரோடு, 

நாமக்கல், 

கரூர், 

திருச்சி, 

தஞ்சாவூர், 

அரியலூர், 

புதுக்கோட்டை, 

நாகப்பட்டினம், 

கடலூர், 

திருவாரூர், 

மயிலாடுதுறை 

ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உபரி நீர் போக்கியாக 16 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback