Breaking News

உத்ரகாண்டில் 10 பேரை பலி வாங்கிய பனிச்சரிவு வெளியான திக்திக் வீடியோ!

அட்மின் மீடியா
0

 உத்தரகாண்டில் நேற்று  ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பயிற்சி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் தலைநகர் உத்தரகாசியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பயின்று வந்த 34 மலையேற்றப் பயிற்சியாளர்கள், 7 பயிற்றுநர்கள், ஒரு செவிலிய உதவியாளர் கடந்த மாதம் 25ம் தேதி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றிருக்கிறார்கள்.உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா – 2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.


அப்போது, மலைச்சிகரத்தின் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் களமிறங்கினர். 

மீட்பு பணியின் போது பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.ஆனால், இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க விமானப்படையின் 2 சீட்டா ராக ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.அவர்களை தேடும் பணியி்ல் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரிய அளவிலான பனிச்சரிவு என்பதால் காணாமல் போனவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் அங்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/FelizKarenP1/status/1577482672519118851

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback