Breaking News

பாட்டிலில் இனி பெட்ரோல் டீசல் விற்பனை இல்லை-தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.



தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

இந்நிலையில், காவல் துறை அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போட வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் போடப்படும். வாகனங்கள் தவிர உதிரியாக எந்தவொரு கேன்களிலோ, பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback