மதம் மாறினால் ஜாதி சான்றிதழ் செல்லாது.! – தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அறிவிப்பு.!
மதம் மாறிய பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு SC ஜாதி சான்று செல்லாது. அத்தனையும் மீறி வழங்கினால் அது போலி சான்றிதழ் ஆகும் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார் அறிவிப்பு.
தமிழகத்தில் ஜாதிகளை வகுப்பு வாரியாக பிரித்து பிறப்படுத்தபட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (MBC), தாழ்த்தப்பட்டோர் (SC/ST), இதர வகுப்பினர் (OC) என வகைப்படுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது.
குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC/ST) எனும் பிரிவுக்கு அரசு அவர்கள் வாழ்வு மேம்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த இடஒதுக்கீடு குறித்து இன்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார் ஓர் முக்கிய தகவலை குறிப்பிட்டார்.அதாவது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறினால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள SC சான்று செல்லாது. அல்லது மதம் மாறிய பின்னர் SC சாதி சான்று வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்தார்தெரிவித்துள்ளார்
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார்:
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் ஆகும்.
இதுகுறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனஅவர் கூறினார்.
Tags: இந்திய செய்திகள்