Breaking News

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அக்.10ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்றும்

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback