Breaking News

ரயிலுக்கும் பிளாட்பார்க்கும் நடுவில் மாட்டிய நபர்- பிளாட்பாரத்தை உடைத்து மீட்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆந்திர மாநிலம் நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணசெய்த ரவிக்குமார் 30 என்ற வாலிபர் கிடாலூர் என்ற நிறுத்தத்தில் அவர்  இறங்க வேண்டும்.ஆனால் அவர் ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்அப்போது நிலை தடுமாறி ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கினார்.



வலியால் அவர் அலறி துடித்தார் இதனைக் கண்ட பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில்  நிறுத்தப்பட்டது.இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/xpressandhra/status/1573268406887141377

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback