Breaking News

இலவச தையல் இந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மாவட்ட சமூகநல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 



மாவட்ட சமூகநல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ஆதரவற்ற ஏழைப் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

1) வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று ரூ.72000/-ற்குள்

2) வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று

3) பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்)

4) வயது சான்று (20 முதல் 40 வயது வரை தகுதி)

5) சாதிச் சான்று

6) விண்ணப்பதாரரின் புகைப்படம் - 2 (வண்ண புகைப்படம் - கடவுச் சீட்டு அளவு)

7) விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று

8) ஆதார் அடையாள அட்டை

மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அலுவலகத்தில் 30-09-2022-ற்குள் சமர்ப்பிக்குமாறு விருதுநகர் மாவட்ட சமூக நல மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம், 
விருதுநகர் மாவட்டம்.


விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:-


குறிப்பு:-

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது உங்கள் மாவட்ட சமூக நல அலுவலகம் சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம்

 


 

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback