Breaking News

ப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மதுரை நீதிபதிகள் வேதனை..

அட்மின் மீடியா
0

 

ப்ரீ ஃபயர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் சென்ற பெண்ணை கண்டுபிடித்து தர கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்:-

 


ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது குழந்தைகளிடையே வன்முறையை தூண்டுகிறது தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைல் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளது

மேலும் இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம், பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்த விதமான இடையூறும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback