நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அட்மின் மீடியா
0
நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
தமிழ்நாட்டில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நரிக்குறவர் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் அர்ஜுன் முண்டா தகவல் தெரிவித்துள்ளார்இதன்
மூலம் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர்,
குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
.
Tags: இந்திய செய்திகள்