காலாண்டு தேர்வு பற்றி பள்ளிகல்விதுறை முக்கிய அறிவிப்பு- முழு விவரம்
தமிழகம் முழுவதும் பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
காலாண்டு தேர்வு பொருத்தவரை பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் புதிய நடைமுறையாக இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டு தேர்வு எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தனது அறிவிப்பில் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
முன்னதாக நடப்பாண்டில் காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்து அதற்கான அட்டவணை தயாரித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி இருந்தது அதில் .6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்தது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்