முக்கிய அறிவிப்பு கத்தார் நாட்டுக்கு போக போறீங்களா….? பி.சி.ஆர். நெகடீவ் சான்றிதழ் கட்டாயம்
அட்மின் மீடியா
0
கத்தாரின் பயணக் கொள்கையில் பொது சுகாதார அமைச்சகம் அடிப்படை மாற்றத்தை செய்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 4 முதல், வெளி நாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு பயணம் செய்த 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர். நெகடீவ் சான்றிதழ் கட்டாயமாக இருக்கும்.
கோவிட் -19 சோதனை செய்தவர்கள் நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் ஆனால் இந்த மாற்றம் செப்டம்பர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
கோவிட் நோயின் நிலைக்கு ஏற்ப நாடுகளை வகைப்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்