கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
கிராம சபைக் கூட்டங்களில்
பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல் போன்றவை
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாணவர்கள் இடைநிற்றல்,
மாணவர் சேர்க்கை,
பள்ளி உட்கட்டமைப்பு,
மாணவர் பாதுகாப்பு
என கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் எனவும் பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று, கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்