ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.8-ம் தேதி எந்த எந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை முழு விவரம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உ
ள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டங்களில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திருப்பூர்,
கோவை,
கன்னியாகுமரி
நீலகிரி
ஈரோடு,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்
அதேபோல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 17- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே சென்னை மாவட்டத்துக்கும் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 2வது சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்