Breaking News

திருப்பதி கோவிலுக்கு ரூ 1.02 கோடி ரூபாய் நன்கொடை அளித்த இஸ்லாமிய தம்பதிகள்

அட்மின் மீடியா
0

திருப்பதி கோவிலுக்கு ரூ 1.02 கோடி ரூபாய் நன்கொடை அளித்த இஸ்லாமிய தம்பதிகள்



சென்னையைச் சேர்ந்த சுபினா பானு மற்றும் அப்துல்கனி ஆகியோர் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்ட பிறகு, அங்குள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்தனர்.

அப்போது  15 லட்ச ரூபாய்க்கான டிடியை தினசரி அன்னதான திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

மேலும் பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்த 87 லட்சம் மதிப்புள்ள பர்னிச்சர்கள் மற்றும் தேவையான உபகரணங்களை அவர்கள் அளித்துள்ளார்கள்.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு கொரானாவின் போது கோயில் வளாகத்தில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பானை நன்கொடையாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback