தேசியகொடியை தனது கண் கருவிழியில் வைத்த நபர் ... வைரல் புகைப்படம்
நமது நாட்டின் 75 வது சுந்தர தினத்தை போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவர் தனது கண்ணில் உள்ள கருவிழியில் நம் நாட்டின் தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
இதற்க்காக அவர் கோழி முட்டையின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும், முட்டையின் ஓட்டிற்கும் இடையில் உள்ள மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார்
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகளை கவுரவிக்கவும் தனது தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் கண்ணுக்குள் தேசிய கொடியை ஓவியமாக வரைந்து உள்ள அவரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றார்கள்
Tags: தமிழக செய்திகள் தமிழக ஷாஹீன்பாக்

