கோவையில் சோதனையின் போது வெடித்து சிதறிய எரிவாய் குழாய்...அலறி ஓடிய மக்கள் -சிசிடிவி வீடியோ
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர்பந்தல் சாலையில் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் எரிவாயு குழாய் பதித்து வந்தது அப்போது இன்று பிற்பகல் சோதனையின் போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது
கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்குவதற்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8-ம் தேதி முதல் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. அந்த குழாய் வழியாக இன்று சோதனைக்காக எரிவாயு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
அப்போது, எரிவாயு குழாய் திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் பொது மக்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பு இல்லை.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/gurusamymathi/status/1557697752947204096
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ