கொடைக்கானல் அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் - வீடியோ
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு மலைக்கிராமப் பகுதியில் உள்ள புல்லாவெளி அருவியில் சுற்றுலா வந்த பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் (28) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்பகுதி பாறைகள் நிறைந்த பகுதியாகும். அப்போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி பள்ளத்தாக்கு பகுதியில் அஜய் பாண்டியன் விழுந்துவிட்டார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், மற்றும் போலீசாரும் இணைந்து அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்
வீடியோ பார்க்க;-
https://twitter.com/Siva143dhanush1/status/1555061576142843904
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ