வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை..வீடியோ
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்நிலையில் கன்னியாகுமரி, கேரள இடையிலான திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இந்த வெள்ளத்தில் ஒற்றை ஆண் காட்டுயாணை சிக்கிக்கொண்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து வெளிவரமுடியாமல் யானை திணறியது.வெள்ளநீரிலிருந்து வெளியேற முடியாமல் யானை அங்கும் இங்கும் அலைகின்றது
ஒருகட்டத்தில் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட யானை அங்கிருந்த மரத்தின் அருகே பாதுகாப்பாக நின்றது. மேலும் யானையின் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் யானையை மீட்க முயற்சித்தனர். ஆனால் வெள்ளம் அதிமாக இருந்ததால் மீட்க முடியாமல் போனதைத் தொடர்ந்து, யானை காப்பாற்ற அணையின் ஷட்டரை அடைத்துள்ளனர். பின்னர் நீர்வரத்து குறைந்ததும் யானை மறு கரையை அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/BaskarPandiyan3/status/1554635887358590976
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ