கனமழை காரணமாக நாளை 05.08.2022 வால்பாறையில் பள்ளிக்கு விடுமுறை
அட்மின் மீடியா
0
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை 05.08.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் கனமழை காரணமாக நாளை 05.08.2022 கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்