அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? – OPS- Eps என இருதரப்புக்கும் வருவாய்துறை நோட்டீஸ்!!
சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவம் காரணமாக பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில், தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் வருகிற 25ஆம் தேதி ஆஜராகும்படி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு வருவாய் கோட்ட அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 145-ன் கீழ் முடக்கம் செய்யப்பட்டது.வில்லங்கம் இருப்பதாக கருதப்படும் சொத்துக்கள் தான் 145 பிரிவின் கீழ் முடக்கப்படும். அந்த வகையில், ஒரு சொத்துக்கு இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில் வருவாய் துறை அதிகாரிகளால் முடக்கப்படும். இதை பின்பற்றியே தற்போது அதிமுக தலைமை அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் வருகிற 25ஆம் தேதி ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்