இந்து கடவுள்கள் இருந்த பேப்பரில் சிக்கன் கறியை மடித்து கொடுத்த இஸ்லாமியர் கைது
அட்மின் மீடியா
0
உத்தர பிரதேசத்தில் சாம்பல் நகரில் சிக்கன் வியாபாரம் செய்யும் தாலிப் உசேன் இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கனை பேப்பரில் வைத்து வழங்குகிறார்.இந்நிலையில் தான் தாலிப் உசேன் இந்து கடவுள்களின் படங்கள் இருக்கும் பேப்பரில் சிக்கன் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரின் பேரில் போலீசார் தாலிப் உசேனின் கடைக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது போலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் . உடனடியாக தாலிப் உசேனை போலீசார் கைது செய்துள்ளார்கள்
இரு பிரிவினரிடையே மத மோதல்களை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது, மத உணர்வுகளை புண்படுத்தியது, கொலை முயற்சி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தலிப் ஹூசைன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்