தனியார் நிறுவனங்கள் சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை பயன்படுத்த தடை!!
சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் சிக்னல் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளது
இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச்செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்யமுடியாது என்றும், இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்டவிரோதம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்