Breaking News

பேரூராட்சிகளில் விரைவில் கலைஞர் உணவகங்கள்- உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

அட்மின் மீடியா
0

பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 


இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த மாநாடு அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. 

இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் தமிழ்நாடு அரசின் சார்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும் என்றும் உணவுத்துறைக்கான 2,000 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க ஒன்றிய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback