அதிபர் மாளிகை பதுங்கு குழியில் போராட்டகாரர்கள் கைப்பற்றிய கட்டுக்கட்டாக பணம்… வீடியோ
அதிபர் மாளிகையில் உட்புகுந்த மக்கள் அங்கு பதுங்கு குழி இருந்ததை கண்டறிந்து உள் நுழைந்தபோது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்மதிப்பு சுமார் 17 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் அந்த பணத்தை யாரும் எடுத்துகொள்ளாமல் நேர்மையாக அந்த முழு பணத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்துளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரர்கள் பலரும், அங்கு கிடைத்த பணத்தை முறையாக கணக்கிட்டு உரிய பொறுப்பு வாய்ந்த துறைகளிடம் ஒப்படைத்திருப்பது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இது குறித்து ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு அதிகாரியும் பணம் பெறப்பட்டதை உறுதி செய்துள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/crewforshoots/status/1545970053052788736
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ